15–வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் பிரான்ஸ் நேரடியாக தகுதி பெற்றது. எஞ்சிய 23 அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. கஜகஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணி ‘டிரா’ செய்தது. இதன் மூலம் ஐஸ்லாந்து அணி முதல் முறையாக ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.