இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவது லீக் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் எஃப்.சி புனே சிட்டி அணியும், மும்பை சிட்டி எஃப்.சி அணியும் மோதின. ஆட்டத்தின் 12 வது நிமிடத்தில் புனே அணி வீரர் சன்லி புனே அணியின் கோல் கணக்கை துவக்கி வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 34வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் பியியோக்கியோனி கோல் அடித்து ஆட்டத்தை சமன் படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியின் 56 வது நிமிடத்தில் புனே அணி வீரர் சன்லி மேலும் ஒருகோல் அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். இறுதியில் புனே அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.