Show all

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 312 ரன்களும் இலங்கை அணி 201 ரன்களும் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 274  ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 111 ரன்கள் கூடுதலாக பெற்றதால், மொத்தம் 385 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் இலங்கை அணி 268 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்தய அணி இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது.

ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு அதிலிருந்து மீண்டு வந்து ஒரு தொடரை வெல்லுவது என்பது இதுவரை நடைபெற்றது இல்லை எனவும் இந்த வெற்றி பெரிய சாதனை எனவும் மேலும் இந்த வெற்றி வீரர்களுக்கு சென்றடைய வேண்டும் எனவும்   விரோட் கோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.