Show all

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியின் பெயர்

2013–ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.

லோதா கமிட்டி அளித்த தீர்ப்பு குறித்து ஆராய மற்றும் செயல்படுத்துவது பற்றி ராஜீவ்சுக்லா தலைமையில் 6 பேர் குழுவை ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு நியமித்தது. இந்த குழுவினர் நேற்று கொல்கத்தாவில் கூடி ஆலோசனை நடத்தினர்.

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக இரண்டு புதிய அணிகளை 2 ஆண்டுகளுக்கு மட்டும் விளையாட வைக்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு பிறகு (2018–ல்) சென்னை, ராஜஸ்தான் அணிகளையும் சேர்த்து 10 அணிகளாக விளையாடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டதாக தெரிகிறது.

ராஜீவ் சுக்லா குழு அளித்த பரிந்துரைகள் ஏற்று கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. மேலும் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் பெயரை மட்டும் மாற்றிவிட்டு வீரர்களை அப்படியே வைத்து விளையாட வைக்க ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. அப்படி முடிவு எடுக்கப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயர் மாறும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.