Show all

ஆட்டோவில் கொழும்பு நகரை வலம் வந்த கோஹ்லி, ஹர்பஜன் மற்றும் ஸ்டூவர்ட் பின்ன

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை இந்திய வீரர்கள் வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். காலேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பிற்கு சென்ற இந்திய அணி வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. ஆனால் கொழும்பில் நடந்த 2வது போட்டியில் அபார வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் நேற்று காலை பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தனர்.

பின்னர் மாலையில் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்த கோஹ்லி, ஹர்பஜன் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஜாலியாக கொழும்பு நகரை வலம் வந்தனர்.

ஹர்பஜன் ஆட்டோவை ஓட்டுவது போன்றும், அணித்தலைவர் கோஹ்லி, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் பின்புறம் அமர்ந்திருப்பது போன்றும் உள்ள ஒரு புகைப்படத்தை ஹர்பஜன் தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.