Show all

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் அரசாணையையும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் அரசுக்கு ஆணையிட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட வசதிகள் குறித்து அண்ணா பிறந்த நாளன்று அறிக்கை வெளியிடவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.