Show all

சஹா, முரளி விஜய் காயம் அதனால் அடுத்த டெஸ்டில் புஜாரா தான் தொடக்க ஆட்டக்காரர்

முதல் டெஸ்ட் போட்டியில் கெண்டைத் தசை காயம் காரணமாக விளையாட முடியாது போன முரளி விஜய், 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார், முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காவிட்டாலும் 2-வது இன்னிங்ஸில் அருமையாக விளையாடி 82 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அதே காயம் கொஞ்சம் அதிகரித்துள்ளது, எனவே அவருக்கு ஓய்வு தேவை என்று கருதியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. சஹாவும் இதே காயம் காரணமாகவே தற்போது விலகியுள்ளார்.

விருத்திமான் சஹாவுக்கு பதிலாக நமன் ஓஜாவும், முரளி விஜய்க்கு பதிலாக கருண் நாயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுலுடன் புஜாரா தொடக்க ஆட்டகாரராக களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருந்த புஜாரா அடுத்த போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஆனால் கருண் நாயருக்கு விளையாட வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.