Show all

தி.மு.க., மாநாட்டில் கருணாநிதி நாம் தான் ஆட்சியமைப்போம் என்று உறுதியாகத் தெரிவித்தார்

தி.மு.க., மாநாட்டில் கருணாநிதி பேசுகையில், இந்தியாவே தி.மு.க.,வை உற்றுநோக்குகிறது. நாம் தான் ஆட்சியமைப்போம் என சொல்லுவது நம்முடைய உறுதியை தெரிவிப்பதாகும்.நாம் தான் ஆட்சியமைக்க உரிமையுள்ளவர்கள். நாம் தான் அண்ணாவின் தம்பிகள். நாம் தான் பெரியாரின் தம்பிகள்.நாம் தான் ஆட்சியமைக்க வேண்டும். வேறு யாரும் ஆட்சியமைக்க முடியாத வகையில் செயல்படுகிறீர்கள். மீண்டும் ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இந்த நம்பிக்கை, கட்சியில் உள்ள தொண்டர்களால் வந்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? தமிழகத்தில் முதல்வர் இருக்கிறாரா? தமிழகத்தில் அரசு இருக்கிறதா? தமிழகத்தில் சட்டசபை இருக்கிறதா? பக்கத்தில் சிறிய மாநிலங்கள் நம்மை விட முன்னேறியுள்ளார்கள். நமக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை.நம்முடைய கருத்து வேறுபாடை மறந்து செயல்பட வேண்டும். நாம் கருத்து வேறுபாடுகளை உருவாக்கி நம்மை அழித்துகொள்ளக்கூடாது என்பதை நினைவு வைத்து கொள்ள வேண்டும். திமு.க., தான் தமிழகத்தை மீட்கக்கூடிய சக்தி என கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.