Show all

அருவருப்பு மனிதர்கள்

இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள் காந்தியின் சிலையை அறைந்தும், தாக்கியும் உள்ளனர். இதனை காணொளியாகப் பதிவு செய்து யுடியூப்பில் வெளியிடபட்டு உள்ளது.அது பின்னர் முகநூலிலும் வெளியிடபட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி கனடா நாட்டின் மானிட்டோபா மாகாணத்தில் வினிப்பெக் நகரில் நடந்து உள்ளது.

இரண்டு இந்தியர்கள் இந்த வெட்கங்கெட்ட செயலில் ஈடுபட்டு உள்ளனர் 3 வது நபர் ஒருவர் இதனை காணொளி எடுத்து உள்ளார்.

நிற்கும் காந்தி சிலையின் காதுகளை பிடித்து கொண்டு இரு ஆண்களும் கன்னத்தில் அறைகின்றனர்.அதில் உள்ள சீக்கிய ஆண் தனது ஷூவை கழ்ற்றி சிலையின் தலையில் அடிக்கிறார். அடுத்த மனிதனும் அதில் இணைந்து கொள்கிறார். அவர்கள் காணொளிக்கும் போஸ் கொடுகின்றனர். இந்த செயலுக்கு 3 பேரும் சிரித்து வேறு கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினத்தின் போது நடந்து உள்ளது ஒருவர் கையில் இந்திய தேசிய கொடி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.