Show all

இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளத

விராட்கோலி தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் படி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும் லோகேஷ் ராகுலும் களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே ரன் எதுவும் இன்றி முரளி விஜய் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ரகானேவும் 4 ரன்களில் வெளியேற இந்திய அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. பின்னர் லோகேஷ் ராகுலுன் ஜோடி சேர்ந்த விராட் கோலி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். சிறிது நேரத்தில் ஹெராத் பந்தில் விராட் கோலி 78 ரன்களில் வெளியேறினார்.

இதைதொடந்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல் தனது அசத்தல் ஆட்டத்தை தொடந்தார். தொடந்து சிறப்பாக ஆடிய ராகுல் சதம் அடித்து அசத்தினார். 4 வது டெஸ்ட் போட்டியில் ஆடும் லோகேஷ் ராகுல் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். சதம் அடித்த சிறிது நேரத்தில் லோகேஷ் ராகுல் சமீரா பந்தில் சந்திமாலிடம் கேட்ச் கொடுத்து 108 ரன்களுடன் வெளியேறினார். ஓரளவு சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 79 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 319 ரன்களை சேர்த்துள்ளது சகா 21 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இலங்கை அணி தரப்பில் ஹெராத், பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மேத்யூஸ், சமீரா, ஆகியோர் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.