Show all

உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் முதல் முறையாக சாய்னா

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 29-வது இடத்தில் உள்ள இந்தோனேசிய வீராங்கனை லிண்டாவை எதிர்த்து விளையாடினார்.

55 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவின் சாய்னா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.இறுதிப் போட்டியில் சாய்னா, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின்-யை எதிர்த்து பலப்பரீட்சை நடத்த உள்ளார். இறுதி போட்டியில் முன்னேறியதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.