Show all

​உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்

போலாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச வில்வித்தைத் தொடரில், இந்திய வீரர் அபிஷேக் வர்மா, தங்கப்பதக்கத்தை வென்றார்.போலாந்தில் வெரஸ்லோ நகரில், சர்வதேச வில்வித்தை தொடரின் 3வது கட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஆடவருக்கான தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில், டெல்லியைச் சேர்ந்த அபிஷேக் வர்மாவும், ஈரான் வீரர் இஸ்மாயிலும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய வர்மா, 148-145 என்ற புள்ளிகள் கணக்கில் தங்கப்பதக்கத்தை வென்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.