Show all

தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் உள்பட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்

அர்ஜூனா விருதுக்கு தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஆகியோர் உள்பட 17 பேரின் பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வருடத்திற்கான வீரர்களை தேர்ந்தெடுக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முன்னாள் நீதிபதி வி.கே. பாலி தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. இந்த குழு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சா பெயரை பரிந்துரைத்துள்ளது.

மேலும், அர்ஜூனா விருதுக்கு தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஆகியோர் உள்பட 17 பேரின் பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது. இதில் தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் பெயர் இடம் பெற்றுள்ளது. வரும் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெலத் போட்டியில் சதீஷ் சிவலிங்கம் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார். இதனால் அவரது பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.