Show all

இங்கிலாந்து 331 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் . மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்காமில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக காணப்பட்ட இந்த மைதானத்தில் முதலில், பேட் செய்த ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி வீரர்கள் நிலைகுலைய செய்தனர்.குறிப்பாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவார்ட் பிராட் பந்து வீச்சில் அனல் பறந்தது. அவரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 60 ரன்னில் சுருண்டது. ஹசில்வுட் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

இதன் பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஆடம் லைத் 14 ரன்களிலும், இயான் பெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் குக் 43 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இவர்கள் 3 பேரும் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோ விக்கெட் சரிவை தடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

முதல்நாள் முடிவில், 65 ஓவர்களில், இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாளான இன்றும் தனது ஆதிக்கத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. ரூட் அபாரமாக ஆடி 130 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 85.2 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இங்கிலாந்து. இதனால் அந்த அணி 331 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.