Show all

பயிற்சி ஆட்டத்தில் ரஹானே சதம்

கொழும்பில் இன்று தொடங்கிய இந்தியா - இலங்கை வாரியத் தலைவர் அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும் தவானும் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பாக ஆடினார்கள். ராகுல் 43, தவான் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ரோஹித் சர்மாவும் கோலியும் வந்த வேகத்தில் திரும்பினார்கள். இருவரும் முறையே 7, 8 ரன்கள் எடுத்தார்கள். புஜாரா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே சிறப்பாக ஆடி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்குகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.