Show all

இலங்கை தொடர் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்: ஜெயசூர்யா

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டியில் பங்குபெறவுள்ளது. இதில் இருஅணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 2 ஆவது டெஸ்ட் போட்டி 20 ஆம் தேதி, 3 ஆவது டெஸ்ட் போட்டி 28 ஆம் தேதியில் நடக்கிறது.

இந்நிலையில் போட்டி குறித்து இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்திய பாகிஸ்தான் தொடரில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. சில வீரர்களின் ஓய்வால் இதுபோன்ற தோல்விகள் அரங்கேறிவிட்டது.

எனினும் இலங்கை அணியில் திறமையான வீரர்கள் பலர் இருப்பதால் இந்திய அணிக்கு இத்தொடர் மிகுந்த சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.