Show all

கிரிக்கெட் வீரர்களுக்கு மனைவி மற்றும் தோழியை அழைத்துச்செல்ல BCCI தடை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி வீரர்களுக்கு மனைவி மற்றும் தோழியையும் அழைத்துச்செல்ல BCCI தடைவிதித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் மனைவி மற்றும் தோழியையும் அழைத்துச்செல்ல தடைவிதித்து BCCI உத்தரவிட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினருடன் போதுமான நேரம் செலவழித்து விட்டதாகவும் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி தலைமை பயிற்சியாளர் இன்றி இந்த தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் இயக்குனாராக ரவிசாஸ்திரி செயல்படுவார் என்றும், ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடன் இணைந்து செயல்பட உள்ளார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.