Show all

அஷ்வினுக்கு அர்ஜுனா விருது

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவாலிடம் இருந்து தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் அர்ஜுனா விருதை பெற்றுக்கொண்டார்.இந்திய அரசாங்கம் சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கௌரவிக்கின்றது. இதில் 2014ஆம் ஆண்டு தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.

டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வேகமாக கைப்பற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு அர்ஜூனா விருது அறிவித்தது. அப்போது அவர் இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடரில் விளையாடிக்கொண்டிருந்ததால் விருதைப் பெறவில்லை. இந்நிலையில் இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவலை சந்தித்த அஸ்வின் அவரது விருதை பெற்றுக்கொண்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.