Show all

எனக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை

இந்திய ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளில் முன்னணி வீரராக வலம் வரும் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு , டெஸ்ட் போட்டிகளில் இன்னும் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன சுரேஷ் ரெய்னா, தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து கலக்கிய போதும், தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைக்க அவரால் முடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தாத காரணத்தால், அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். இதனால், ஆகஸ்ட் 12 ஆம் தேதி இலங்கையில் நடைபெறவுள்ள டெஸ்ட் அணியில் சுரேஷ் ரெய்னா சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆங்கில தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சுரேஷ் ரெய்னா கூறியுள்ளதாவது:- பரபரப்பு மிக்க ஒரே ஒரு நாள் போட்டி அல்லது 20 ஓவர் போட்டியை வைத்து வீரர் ஒருவரின் திறமையை நீங்கள் கணிக்க முடியாது. எனது திறமையை நிரூபிக்க ஐந்து டெஸ்ட் போட்டிகள் தேவை என்று நான் கேட்கவில்லை. எனக்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகள் விளையாட வாய்ப்பு தாருங்கள்.இதில் நான் சோபிக்க தவறினால், ஒருநாளும் எனக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம். டெஸ்ட் மட்டத்தில் சீராக ரன் எடுப்பதற்கான திறமை என்னிடம் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். எனவே வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.