ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும்
அங்கீத்சவான், அஜீத் சண்டிலா ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.
இதையடுத்து ஸ்ரீசாந்த், மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு, இந்திய அணிக்காக
விளையாடுவேன் என்று தெரிவித்தார்.
கேரளா கிரிக்கெட் வாரியமும், மும்பை கிரிக்கெட் வாரியமும், வீரர்கள் மீதான
தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால், ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத்சவான் ஆகியோர் மீது இந்திய கிரிக்கெட்
வாரியம் ஆயுள்கால தடை விதித்திருந்தது. நீதிமன்றம் விடுதலை அளித்தாலும்,
கிரிக்கெட் வாரியம் தடையை நீக்காது என்று இந்திய கிரிக்கெட் வாரியம்
சமீபத்தில் அறிவித்தது.
மேலும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின்
செயலாளர் அனுராக் தாகூர் , "தடையை நீக்குவது தொடர்பாக ஸ்ரீசாந்த் உள்பட
யாரிடம் இருந்து இதுவரை எங்களுக்கு வேண்டுகோள் எதுவும் வரவில்லை.
அப்படி கோரிக்கையை விடுக்கப்பட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்." என்று
தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.