Show all

கலாமின் இறுதிச்சடங்கையொட்டி வியாழக்கிழமை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழக அரசு

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உடல் அடக்கம் நடைபெற உள்ள வியாழக்கிழமையன்று, தமிழகத்தில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கலாமின் உடல் அடக்கம் நாளை மறுதினம் ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது இதனையடுத்து அன்றைய தினம் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திற்கும் பொது விடுமுறை விடுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கரமராஜா அறிவித்துள்ளார். இதோ போல் பால் முகவர் சங்கமும் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.