ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்தும், அவரது சக விளையாட்டு வீர்ர்களான அஜித் சண்டிலா மற்றும் அங்கீட் சவான் ஆகியோர் மீது 2013இல் சூதாட்ட குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதாது என்று கூறிய நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர்களை 25-07-15 சனிக்கிழமை அன்று விடுவித்தது.
இந்நிலையில், கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதான நிர்வாகம் ஸ்ரீசாந்துக்கு பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளதாக அம்மைதானத்தின் சேர்மன் என்.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வது இதுவரை ஸ்ரீசாந்த் எங்களை அணுகி கேட்கவில்லை. ஆனால் மைதானத்தில் வலைப்பயிற்சி மேற்கொள்வது குறித்து எங்களை அணுகினால், நிச்சயமாக அவருக்கு அனுமதி வழங்கப்படும்.
முன்னதாக ஸ்ரீசாந்த் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகிய பிறகு, அவருக்கு பிசிசிஐ விளையாட தடைவிதித்ததை அடுத்து மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள கேராள கிரிக்கெட் சங்கம் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.