Show all

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது

12ம் தேதி நடக்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் சந்தீப் படேல் தலைமையிலான கூட்டத்தில் இந்திய அணிக்கான 15 வீரர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.கோலி தலைமையிலான இந்த அணியில், ஷிகர் தவான், விருத்திமான் சகா, கே.எல்.ராகுல், இஷாந்த் சர்மா, ஹர்பஜன், அஷ்வின், உமேஷ் யாதவ், ரோகித் சர்மா, முரளி விஜய், ரஹானே, கரண் சர்மா, புவனேஷ்வர் குமார், வருண் ஆருண், புஜாரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அமித் மிஷ்ரா 4 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது சமி காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.இந்த டெஸ்ட் தொடர் மூன்று போட்டிகளாக நடக்கவுள்ளது. 12ம் தேதி முதல் போட்டியும், 20ம் தேதி இரண்டாவது போட்டியும், 28ம் தேதி மூன்றாவது போட்டியும் நடக்கவுள்ளது. இதற்கு முன்னதாக 6, 7, 8, ஆகிய தேதிகளில் பயிற்சி ஆட்டம் நடைபெறவுள்ளது.இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டிகளில் அஷ்வின், கோலி, உமேஷ் யாதவ், ரெய்னா, ஷிகர் தவான் போன்ற இளம் வீரர்கள் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.