மதுரையில் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள தமிழ் ஜெயா என்ற தியேட்டரில் பாகுபலி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் தியேட்டரில் எந்த சேதமும் ஏற்படவில்லை.இதையடுத்து தியேட்டரில் போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.