இந்தியா ஜிம்பாவே இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர் முடிவில் ஜிம்பாவே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. சிப்பாபா 67 ரன்கள் எடுத்தார். மஸகட்சா 19 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் புவனேஷ்குமார், மொகிந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனைத்தொடர்ந்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஜிம்பாவே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.