Show all

தேர்தல் பிரச்சாரத்தின் போது தொண்டரை ராஜபக்சே தாக்கியதால் அமலி

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, தொண்டர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பங்கேற்றார்.

அப்போது தொண்டர் ஒருவர் ராஜபக்சே மேடையில் ஏறுவதற்கு முன்பாக அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஹிந்த ராஜபக்சே அவரை தாக்கினார்.பின்னர் ராஜபக்சேவின் பாதுகாவலர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் உறுப்பினர்களும் அவரை சமாதானப்படுத்தி அழைத்துசென்றனர். பின்னர் மேடையில் ஏறிய அவர் புத்த பிக்குகளுக்கு மரியாதை செலுத்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.