Show all

கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்நிலையில், தங்கள் எதிரிகள் மீதான தாக்குதலின்போது, குளோரின் உள்பட மிகவும் கொடிய விஷ வாயுக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆய்வு நடத்திய அமைப்புகள், ஆபத்தான ரசாயனம் நிரப்பட்ட ஏவுகணைகளை, குர்திஸ் படைகள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் வீசியதாக தெரிவித்துள்ளன. வடசிரியாவின் ஹசாகக் மாகாணத்தில் 2 இடங்களில் இந்த ரசாயன தாக்குதல்கள் நடந்து உள்ளன என்றும், ஈராக்கின் மொசூல் அணைப்பகுதியில் குர்திஸ் படைகள் மீது வீசப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.இந்த தாக்குதலில் பல குர்தீஷ் படை வீரர்கள் நினைவு இழந்ததோடு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.