பிரேசில் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் இருந்த ஒரு மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனே, ஆசிரியர்கள் அந்த மாணவியை, மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், அந்த 10 வயது மாணவியின் வயிற்றில், ஏழு மாத சிசு இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, மாணவியை விசாரித்ததில், குழந்தைக்கு தந்தையும், தாத்தாவும் ஒருவரே என்று மேலும் ஒரு குண்டை துாக்கிப் போட்டார்.விஷயத்தை வெளியில் சொன்னால், தாயையும், தம்பியையும் கொன்று விடுவேன் என்று தந்தை மிரட்டியதாக, மாணவி தெரிவித்தாள். போலீசார், அந்த கொடூர தந்தையை கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே, குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது; சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பான குற்ற வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்தது.அந்த சிறுமியின் தாயை, போலீசார் துருவினர். அப்போது, தன் முன்னாள் கணவரின் மகளுக்கு, இந்நாள் கணவன் செய்த கொடுமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.