Show all

பார்முலா 1 கார் பந்தய வீரர் ஜூல்ஸ் பியான்சி மரணம்

கடந்த 9 மாதங்களாக கோமா நிலையில் இருந்த பார்முலா 1 கார் பந்தய வீரர் ஜூல்ஸ் பியான்சி (25 வயது, பிரான்ஸ்) நேற்று காலமானார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுஸூகா நகரில் நடைபெற்ற ஜப்பான் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின்போது மீட்பு டிரக் மீது ஜூல்ஸ் பியான்சி ஓட்டிய கார் (மாரசியா அணி) பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் பலமாக காயம் ஏற்பட்டதால் சுயநினைவிழந்த பியான்சிக்கு, கடந்த 9 மாதமாக கோமா நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று அவர் காலமானார். கனமழை கொட்டியபோது இந்த பந்தயத்தை நடத்தியதே விபத்துக்கு முக்கிய காரணமாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.