Show all

2-வது புரோ கபடி லீக் போட்டித் தொடர் தொடங்கியது

8 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது புரோ கபடி லீக் போட்டித் தொடர் மும்பையில் உள்ள நேஷனல் கிளப் ஆப் இந்தியா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந் தேதி வரை நடைபெறும்.

இந்த கபடி திருவிழா மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், பாட்னா, ஐதராபாத், டெல்லி, பெங்களூரு, புனே ஆகிய 8 நகரங்களில் நடக்கிறது. லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

நேற்று இரவு மும்பையில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற யு மும்பை அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மும்பை அணி 29-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு அணி 33-25 என்ற புள்ளி கணக்கில் பெங்காலை சாய்த்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தெலுகு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8 மணி) அணிகள் மற்றும் யு மும்பை-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.