Show all

முதல்வர் ஜெயலலிதா ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில் இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்றும் அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி வழங்கி வருவதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.