Show all

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 33 பேர் பலி

ஆப்கன் வீரர்கள் மற்றும் வெளிநாட்டுப் படையினர் முகாமிட்டுள்ள ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் நேற்று மாலை நடைபெற்ற சக்தி வாய்ந்த தற்கொலைப்படைத்தாக்குதலில் 33 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லைக்கு மிகவும் அருகே உள்ள இந்த இடத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை காரில் நிரப்பியபடி, அமெரிக்க ராணுவதளத்தின் முகாமுக்குள் நுழைய முயற்சித்த தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவன், முகாமின் நுழைவு வாயிலருகே உள்ள சோதனைச் சாவடியை நோக்கி வரும்போது வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.

அப்போது, சோதனைச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 33 பேர் இந்த தாக்குதலில் பலியாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.