Show all

வடகொரிய ராணுவ தளபதி கொல்லப்பட்டது நிரூபணமானது

வடகொரியாவின் புதிய ராணுவ தளபதியாக, பாக் யங் சிக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், முன்னாள் ராணுவ தளபதி ஹியான் யாங் சோல், கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.ஹியான், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் குறித்த தன் அதிருப்தியை, சிலரிடம் ரகசியமாக பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ரகசியம், கிம் காதுக்கு எட்டவே இது, அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கிம் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஹியான் சற்றே கண்ணயர்ந்துள்ளார். இதை தனக்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதிய கிம், ஏற்கனவே ஹியான் மேல் இருந்த கோபத்தில், அவரை, பொதுமக்கள் முன்னிலையில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். அதன்படி, இரு மாதங்களுக்கு முன் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதை, தென்கொரிய உளவு அமைப்பு பகிரங்கப்படுத்தியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.