Show all

ஜோகோவிச் 3–வது முறையாக விம்பிள்டன் பட்டதை வென்றார்

லண்டனில் நேற்று நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2–ம் நிலை வீரர் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து) மோதினர்.

டென்னிஸ் உலகில் பலம் வாய்ந்த இரு வீரர்கள் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. முதலாவது செட்டை ஜோகோவிச்சும் இரண்டாவது செட்டை பெடரரும் கைப்பற்றினர். முதல் இரு செட்கலுமே டைபிரேக்கர் வரை சென்றது. அதனால் ஆட்டம் மேலும் பரபரப்பாக மாறியது.

2 மணி 56 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் ஜோகோவிச் 7–6 (7–1), 6–7 (10–12), 6–4, 6–3 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 28 வயதான ஜோகோவிச் விம்பிள்டனை வெல்வது இது 3–வது முறையாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.