Show all

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா சாம்பியன்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ரஷியாவின் எகர்டினா மகரோவா - எலீனா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது.

போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்திலுள்ள மகரோவா - வெஸ்னினா ஜோடி முதல் செட்டை கைப்பற்றியது.இதன் பிறகு சுதாரித்த சானியா ஜோடி இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை கைப்பற்றியது.

மொத்தத்தில் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் 5-7, 7-6 (7/4), 7-5 என்ற செட் கணக்குகளில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று விம்பிள்டன் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாறு படைத்தார் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.