Show all

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லைப்பகுதி கணவாய்களில் பனி உறைய தொடங்கி உள்ளது. இதை பயன்படுத்தி எல்லையோரம் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.எல்லையோர மாவட்டமான குப்வாராவின் டாங்தர் பகுதி வழியாக கடந்த சில வாரங்களில் மட்டும் நடந்த 3 ஊடுருவல் சம்பவங்களை இந்திய பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

இந்த நிலையில் குப்வாரா மாவட்டத்தின் எல்லையோர பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிரன் பகுதியில் தீவிரவாதிகள் சிலரின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

உடனே அந்த இடத்தை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் நுழைவதற்காக, சில தீவிரவாதிகள் எல்லை வேலியை அறுத்துக்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இறுதியில் 3 தீவிரவாதிகலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.