Show all

காதுகள் இல்லாமல் பிறந்த நேபாள சிறுவன்

நேபாளத்தில் உள்ள பிரதீப் ஷா என்ற 4 வயது சிறுவனுக்கு பிறவியிலேயே காதுகள் இல்லை அதனால் அவனால் பேச முடியாது ஆனால் ஓவியம் வரைவதில் புத்திசாலியாக இருக்கிறான்.

நேபாளத்தில் வசித்து வரும் பிரதீப் ஷா (வயது 4) இவர் தந்தை பிஹாரி ஷாவுடன் வசித்து வருகிறான். பிறக்கும் போது இவன் காதுகள் இல்லாமல் தான் பிறந்தான் என்று அவரது தந்தை கூறியுள்ளார். அதனால் பேசும் திறனை இழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சிறுவனின் தந்தை பிஹாரி ஷா பழ வியாபாரம் செய்து வந்தார் தற்போது மருத்துவமனை அருகே பிச்சை எடுத்துவருகிறார். பிரதீப் ஷா வின் அண்ணன் மற்றும் அம்மா நேபாள நாட்டில் நடந்த நிலநடுக்கத்தால் பலியானார்கள் நாங்கள் இப்போது தனியாத்தான் வசித்து வருகிறோம் என்று சிறுவனின் தந்தை கண்ணீருடன் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று பரிசோதனை செய்தோம் அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரூ.7 லட்சம் செலவு ஆகும் என்று தெரிவித்தார்கள். நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் என்குடும்பத்தையும், சொத்துக்கள் அனைத்தும் இழந்து நிற்கிறோம் என்று சிறுவனின் தந்தை பிஹாரி ஷா தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.