Show all

மன்னார்குடியில் 2 குழந்தைகள் கழுத்தை அறுத்து படுகொலை உயிருக்கு போராடிய நிலையில் தாய் மீட்பு

மன்னார்குடி அருகே உள்ள நல்ரான்குட்டை கீழ 2-ம் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். பழனியில் உள்ள பழனியாண்டவர் அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெனிட்டா (39). மன்னார்குடி அருகே உள்ள நெம்மேலி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு கவின் முகில் (12) என்ற மகனும், தமிழிசை (7) என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இன்று அதிகாலை வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. இதனை வீட்டின் கீழ் தளத்தில் வாடகைக்கு வசித்து வருபவர் பார்த்து மாடிக்கு சென்றார்.அப்போது வீட்டில் கவின் முகில், தமிழிசை ஆகியோர் கழுத்து அறுக்கப்ட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். பெனிட்டா கழுத்தில் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.இது குறித்து மன்னார்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த பெனிட்டாவை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.