Show all

தமிழக மக்களின் ஆதரவை பா.ஜ.க. பெற முடியாது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தாம்பரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை இதுவரை அணைக்கவில்லை. அங்கு ஏற்படும் புகையால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு தேவையான மருத்துவ வசதி எதுவும் செய்து தரவில்லை. இதை கட்டுக்குள் கொண்டு வர பெரிய முயற்சி எடுக்க வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமராஜரை டெல்லியில் கொல்வதற்காக எந்த இயக்கம் ஊர்வலமாக சென்று அவருடைய வீட்டை தாக்கினார்களோ அதே இயக்கத்தை சேர்ந்தவர்கள், அவர்களுடைய தலைவர் அமித்ஷாவை அழைத்து வந்து காமராஜருக்கு விழா எடுக்க போகிறோம் என்று கூறி இருக்கிறார்கள். இது நகைப்புக்குரிய செயல். அவர்கள் செய்த கொடுமைக்கு பிராயசித்தமாக இதை செய்கிறார்களா? என்று நான் கேட்க விரும்புகிறேன்.
காமராஜர் பெயரை உச்சரிக்க பா.ஜ.க.வினர் தகுதியில்லாதவர்கள் என்றும், தமிழக மக்கள் ஆதரவை பா.ஜ.க.வால் எந்த வகையிலும் பெற முடியாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.