Show all

ஆஷஸ் கிரிக்கெட் இராண்டாம் நாள் முடிவில் போட்டியின் நிலை

இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முன்னதாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் மொயின் அலி சிறப்பாக ஆடி 77 ரன்கள் குவித்தார். இறுதியில் இங்கிலாந்து 430-க்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் அதிகபட்சமாக 5 விக்கெட்களை விழ்த்தினார், ஹசில்வுட் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்திலேயே சொதப்பியது கிரிஸ் ரோகர்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடி 95 ரன்கள் குவித்தார். இராண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.