Show all

தணிக்கையாளர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு ரவிசுப்பிரமணியத்திடம் துணை காவல் ஆணையர் விசா

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காஞ்சி சங்காராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட பலரை புதுச்சேரி கோர்ட்டு விடுதலை செய்தது.இதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் சென்னை நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் பரபரப்பான புகார் மனுவை அளித்தார்.

அந்த புகார் மனுவில் தணிக்கையாளர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் அரசு வக்கீலை சந்தித்து நடந்த உண்மைகளை கூற புகார் மனுவை அளித்தேன். அதன் பிறகு எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இதனால் என்னுடைய உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இது குறித்து துணை காவல் ஆணையர் விசாரணை செய்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.