Show all

+2 மார்க் சீட் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும்

+2 ஒரிஜினல் மார்க் சீட் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.2015-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே மாதம் 14-ம் தேதி முதல் பள்ளிகளின் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி முதல் ஒரிஜினல் மார்க் சீட் வழங்கப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த சான்றிதழ்களை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.