Show all

இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம்

கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நேற்று சென்றது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின் போன்ற சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்க கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய அணி நேற்று ஜிம்பாப்வேக்கு சென்றது.

அணியில் தமிழக வீரர் முரளி விஜய், உத்தப்பா அணியில் இடம் பிடித்துள்ளனர். மேலும் இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வரும் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.