Show all

மத்திய பிரதேசத்தில் நாய்க்கு ஆதார் அட்டை வழங்கல்

மத்திய பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்றிற்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த மாநிலத்தின் ஓவேரி நகரில் நீண்ட நாட்களாக ஆதார் அட்டை வழங்குவதில் குளறுபடி நடைபெறுவதாக புகார்கள் வந்தன இதனையடுத்து ஆதார் அட்டை பணிகளை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது டாமி சிங் என்ற பெயரில் நாய் ஒன்றிற்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.அதில் டாமி சிங் தந்தை பெயர் சேரு சிங் பிறந்த நாள் நவம்பர் 26 2009 என்று அந்த அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது இதற்கு ஓவேரி நகரில் ஆதார் அட்டை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள தனியார் நிறுவனம் மீது அரசு அதிகாரிகள் குடுத்த புகாரையடுத்து அந்த நிறுவன மேற்பார்வையாளர் அசம்கானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.