Show all

சானியா மிர்சாவுக்கு எதிராக வலைதள ஆர்வலர்கள் சீண்டலும், பதிலடியும்! பிரச்சனை: எது தேசப்பற்று என்பதானது

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பல தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சானியா மிர்சாவிடம் இருந்து ஒரு இரங்கல் செய்தியோ, கண்டன அறிக்கையோ வெளிவரவில்லை என்பதை வலைதள ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கான சானியா மிர்சாவின் பதிலடி: 'பிரபலங்கள் என்றாலே தங்கள் தேசியப் பற்றை காட்ட கீச்சு, முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தீவிரவாத தாக்குதல்களை கண்டித்து பதிவு செய்ய வேண்டும் என பலர் விரும்புகின்றனர். தீவிரவாத தாக்குதல்களைப் பொதுவெளியில் தான் கண்டிக்க வேண்டுமா? எனது வீட்டு மொட்டை மாடி மீது நின்று கொண்டு தீவிரவாதத்திற்கு எதிராக கூவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. தீவிரவாதத்தை சமூக வலைதளங்களில் கூவிக் கூவி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சரியாக சிந்திக்கும் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்தான். நான் தற்போது அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் சானியா மிர்சா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,067.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.