Show all

திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்துக்கு அதிமுக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்துக்கு அதிமுக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுடர் ஓட்டத்துக்கு தடை விதித்த அதிமுக அரசுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழின உயர்வு, எழுச்சிக்கு வித்திட்ட திராவிட இயக்கத்தின் 100வது ஆண்டு விழா சுடர் ஓட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டு அண்ணாவின் பெருமைக்கு முதல்வர் ஜெயலலிதா துரோகம் செய்து வருகிறார் என்று வைகோ கூறியுள்ளார். அதிமுக அரசின் துரோகம் செய்யும் வஞ்சத்தை அனைவரும் உணர்வார்கள். மதிமுக அரசு எந்தவொரு செயல்பாடும் இதுவரை சட்டம்-ஒழுங்கை பாதித்தது இல்லை என்றும் கூறியுள்ளார். திராவிட இயக்க நூற்றாண்டு சுடரை தடை செய்யும் முயற்சி எதேச்சதிகாரப் போக்கு என்றும் வைகோ கூறியுள்ளார். திராவிட இயக்கத்தால் பதவியில் உள்ளவர்கள் அதன் லட்சியத்தை மழுங்கச் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.