Show all

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்! மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர். இந்தியாவின் பொருளாதார நிலை கவலை அளிப்பதாக கூறியுள்ளார். 

27,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தினை மேம்படுத்த புதிய கொள்கைகளை வகுக்க விருப்பம் காட்டவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர். இந்தியாவின் பொருளாதார நிலை கவலை அளிப்பதாக கூறியுள்ளார். 

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னால் இயன்ற வரையிலான சப்பைக் கட்டுகளை முன்னெடுத்து வரும் நிலையில், அவரது கணவரோ உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளது, சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெளிவான கொள்கை இல்லை மேலும் நேருவின் சோசியலியத்தை விமர்சிப்பதற்கு பதிலாக, பொருளாதாரத்தை தாராளமயமாக்குவதற்கு வழி வகுத்த, ராவ், சிங்கின் பொருளாதார மாதிரியை பாஜக பின்பற்ற வேண்டும் என்றும், அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கு தெளிவான பொருளாதார கொள்கை என்றும் எதுவுமே இருந்தது இல்லை என்றும், இது தனது கொள்கை இல்லை எனக் கூறிவரும் பாஜக, இதுவரை அதன் நிலையான கொள்கை இது தான் என்று தெளிவுபடக் கூறியதும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். 

பாஜக, நாட்டின் மிகப்பெரிய ஆளும் கட்சியாக இருந்தாலும், அதிலும் குறிப்பாக தற்போது பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார கொள்கைகளினால் அது வெற்றி பெறவே இல்லை. அதை தற்போது வரை பாஜக உணர்ந்ததும் இல்லை என்றும் சாடியுள்ளார். 

மேலும் நேருவின் பொருளாதாரக் கொள்கைகளை இது வரை பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக விமர்சித்து வருகிறது. இந்தத் தாக்குதல் அரசியல் தாக்குதலாக உள்ளது. அரசியல் கொள்கைகள் வேறு, பொருளாதார கொள்கைகள் வேறு என்பதைக் கட்சியின் சிந்தனையாளர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.   

பொருளாதாரத்தினை சரிசெய்ய இது தான் சரியான நேரம் மேலும் தற்போது நிலவி வரும் நெருக்கடியைப் போல், முன்பு ஏற்பட்ட போது ராவ் மற்றும் மன்மோகன் சிங் மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக முன்வர வேண்டும் என்றும், தற்போது நீரில் மூழ்கும் கப்பலைப் போல் உள்ள உள்ள இந்தியப் பொருளாதார நிலையைச் சீர் செய்ய இதுவே சரியான நேரம் என்றும் பரகலா கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,305.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.