Show all

தான்தோன்றித் தனமான சேரன் பேச்சுக்கு சீமான் கண்டனம்

அண்மையில் நடந்த கன்னாபின்னா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் கலந்து கொண்டார். அதில், சேரன் கூறியதாவது, “புதிய தமிழ்த் திரைப்படங்களை ஆன்லைனில் ஏற்றி திரைத்துறைக்கு எதிரியாக இருப்பது ஈழத்தமிழர்கள்தான். அவர்களுக்காகவா நாம் போராட்டம் நடத்தினோம் என்று நினைத்தால் அருவெறுப்பாக உள்ளது,” என்று கூறினார். தான்தோன்றித் தனமான சேரனின் இந்தப் பேச்சால் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டோரும் அதிர்ந்து போயினர். இதை அடுத்து, சேரனின் பேச்சுக்கு உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில், சேரனின் நெருங்கிய நண்பரான இயக்குனர் சீமானும், சேரனுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், சீமான் கூறியதாவது, “அந்த விழாவில் சேரன் அப்படிப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொதுவெளியில் சேரன் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்” என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.