Show all

அரண்மனை குடும்ப விவகாரத்தை விளக்கும் ஆவணப்படம் சேனல் 5 தொலைக்காட்சியில்

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி சேனல் 5, மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா ஆகியவர்களின் ராஜ வாழ்க்கையை பற்றி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தில் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இடம் பெற்றுள்ளன.

 

குறிப்பாக, மகாராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்த பிறகு, இளவரசர் பிலிப்பிற்கு அதிக பெண்களுடன் ரகசிய தொடர்பு இருந்ததாக இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இளவரசர் பிலிப் பெண்கள் பின்னால் சுற்றுபவராகவும், மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், அடிக்கடி பிரபலமான நபர்களுடன் பார்ட்டிகளுக்கு செல்பவராகவும் இருந்துள்ளார்.

பிலிப்பின் இந்த நடவடிக்கைகள் மகாராணி எலிசபெத்தின் தாயாருக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

ஒரு கட்டத்தில் இளவரசருக்கும், மகாராணியின் தாயாருக்கும் சண்டை முற்றிவிட இளவரசர் தனது மாமியாரை பங்கிங்க்ஹாம் அரண்மனையை விட்டு பலவந்தமாக வெளியேற்றியுள்ளார். எனினும், தனது கணவரின் நடவடிக்கைகளைக் கண்டு மகாராணி வேதனைபட்டாரே தவிர அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இதுமட்டுமின்றி இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி டயானா ஆகிய இருவருக்கும் எப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்டது? எப்படி விவாகரத்து பெற்றனர் என்பதையும் இந்த ஆவணப்படத்தில் காட்டபட்டு உள்ளது.

 

அரண்மனை குடும்ப விவகாரத்தை விளக்கும் இந்த ஆவணப்படம் நாளை புதன்கிழமை இரவு முதல் சேனல் 5 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.