Show all

நடுவண் அரசு நடுநிலை தவறிவிட்டது என சோனியா காந்தி குற்றச் சாட்டு

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் நடுவண் அரசு நடுநிலை தவறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.

 

பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், மக்களவையில் காங்கிரசின் குரல் வலையை நெறித்த நடுவண் அரசு, சமூக ஆர்வலர்களையும் ஊமையாக்கிவிட்டது என்றார்.

 

நடுவண் அரசு தற்போது கல்வி நிலையங்களிலும் குறி வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் நடுவண் அரசு நடுநிலை தவறிவிட்டதாக கூறிய சோனியா காந்தி, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற வரவுசெலவு திட்ட கூட்டத் தொடரில் காங்கிரஸ் எழுப்பும் என்று உறுதியுடன் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.